Published : 30 Mar 2016 08:06 AM
Last Updated : 30 Mar 2016 08:06 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக்குழுக்கள் களமிறங்க தயாராகி வருகின்றன. வடசென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கலைக்குழுக்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆட்சியை விமர்சிக்கும் வீதி நாடகங்களையும் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, வியாபாரமாகும் கல்வி போன்றவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல்களையும் கலைக்குழுவினர் தயாரித்து வைத்துள்ளனர். மதுவுக்கு எதிராகவும், ஜாதி அரசியலையும் அடையாளப்படுத்தும் வகையிலும் நையாண்டி கதாகாலட்சேபத்தையும் நடத்த உள்ளனர். இதுகுறித்து கலைக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜேசுதாஸ் கூறும்போது, ‘‘தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக விடியல், பாரதி, வசந்தம் ஆகிய 3 கலைக்குழுக்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீதி நாடகக் கலைஞர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவான எங்களது கலைநிகழ்ச்சிகள், மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT