

சென்னையில் வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்களைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அவற்றை திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகநடைபெற்று வந்த மேம்பால பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், வேளச்சேரிமற்றும் கோயம்பேடு மேம்பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவுள்ளார்.
சென்னையில் இந்த இரண்டு மேம்பாலங்களும் முக்கியமானது என்பதால், வேளச்சேரி மற்றும்அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும், கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் சுமார் 40 சதவீதம் வரையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.