Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM

தேவர் நினைவிடத்துக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வராதது ஏன்?- திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வராததற்கு கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார்.

கமுதி அருகே பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தி வருகிறோம். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி இறந்த துக்க திதி நாளை முன்னிட்டு வரவில்லை. அவர் நவம்பர் 1-ம் தேதி தேவர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தேவர் நினைவிடத்துக்கு வரவில்லை. இருப்பினும் அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x