Published : 30 Mar 2016 07:53 AM
Last Updated : 30 Mar 2016 07:53 AM

முறைகேடான சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்: திமுக, அதிமுகவினருக்கு வைகோ எச்சரிக்கை

`தமிழகத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக, அதிமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்’ என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தேமுதிக - மக்கள் நலக் கூட் டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நேற்று பாளையங் கோட்டையில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேலும் பேசியதாவது: ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில், லாரி லாரியாக பணம் கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பங்களாவை சோதனையிட வேண்டும். அதிமுகவினரும் திமுக வினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2-ஜி விவகாரத்தில் என்னிடம் பல அஸ்திரங்கள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x