Published : 31 Mar 2016 08:21 PM
Last Updated : 31 Mar 2016 08:21 PM

தமிழக அரசு விற்கும் மதுவினால் 2 லட்சம் பேர் இறப்பு: அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 20 பேர் தான் இறந்துள்ளனர். ஆனால், அரசு விற்கும் மதுவினால் 2 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்று பாமக முதல்வர் வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

உங்கள் ஊர் உங்கள் அன்புமணி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கும்பகோணத்தில் டெல்டா மாவட்ட மக்களுடன் அன்புமணி ராமதாஸ் இன்று கலந்துரையாடினார்.

அப்போது அன்புமணி பேசியதாவது:

பாமக ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்கும். லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அண்டை மாநிலங்களை விட தமிழத்தில் சிமெண்ட் விலை அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 20 பேர் தான் இறந்துள்ளனர். ஆனால், அரசு விற்கும் மதுவினால் 2 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

ஊடகங்களுக்கு அரசியல் தலைவர்கள் மிரட்டல் விடுக்கக்கூடாது. அரசுக்கும், மக்கள் பிரச்சினைகளுக்கும் இடையில் இயங்கும் ஊடகங்களை அரசியல் தலைவர்கள் மதிக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x