Published : 26 Oct 2021 12:09 PM
Last Updated : 26 Oct 2021 12:09 PM

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் தமிழகத்துக்கு அதிக அளவு மழை கிடைக்கும். அத்தகைய வடகிழக்குப் பருவமழை நேற்று (அக். 25) தமிழகத்தில் தொடங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 26) சென்னை, தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பருவமழைக் காலத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, கனமழை, வெள்ளம் போன்றவை நேரிட்டால் மக்களை எப்படிப் பாதுகாப்பது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு முதல்வர் இக்கூட்டத்தில் வழங்கியுள்ளார்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x