

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு திரும்பிய பள்ளி மாணவியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரிவாளால் வெட்டினார்.
படுகாயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் துணை ஆய்வளராக இருப்பவர் காசியம்மாள். இவரது மகள் உமாமகேஸ்வரி (17). இவர் பிளஸ் 2 பயின்று வருகிறார். இன்று தேர்வு எழுதிவிட்டு திரும்பும்போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் உமாமகேஸ்வரியை சரமாரியாக வெட்டினார்.
பெரிய பெருமாள் மாட தெருவில் பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிவாள் வெட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறோம். சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை" என்றனர்.