Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 6-ம் கட்ட முகாமில் 22.33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 6-வது கட்ட மெகா முகாமில் 22.33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் மெகாகரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்.12-ம் தேதி முதல் வாரந்தோறும் 5 கட்ட மெகா முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 6-வது கட்ட மெகாமுகாம் இதுவரை இல்லாத வகையில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று நடந்தது. இதன்படி ஆரம்பசுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள்,பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில்இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடந்த முகாமில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 445 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பரிசுப் பொருட்கள் விநியோகம்

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசிபோடப்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தார். இதேபோல், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் முகாமை ஆய்வு செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவதில்லை. அதனால், அவர்களுக்காக இந்தவாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற 6-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் நேற்று 50 ஆயிரம்இடங்களில் நடைபெற்ற 6-வதுமெகா முகாமில் முதல் தவணையாக 8 லட்சத்து 67,573 பேருக்கும், இரண்டாவது தவணையாக 13 லட்சத்து 65,646 பேருக்கும் என மொத்தம் 22 லட்சத்து 33,219 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மெகா கரோனாதடுப்பூசி முகாமில் பணியாற்றியசுகாதாரத் துறை பணியாளர் களுக்கு நாளை (இன்று) விடுமுறைஅளிக்கப்படுகிறது. அதனால், நாளை (இன்று) தடுப்பூசி போடப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x