Published : 22 Oct 2021 07:22 PM
Last Updated : 22 Oct 2021 07:22 PM

அம்பத்தூரில் சாதியின் பெயரில் அமைந்திருந்த குளத்தின் பெயர் மாற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

அம்பத்தூரில் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (அக். 22) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில், அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என்ற புதிய பெயர் வைக்க சிறப்பு அதிகாரி (நிலைக்குழு வரிவிதிப்பு (ம) நிதி) மூலமாக மன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.

எனவே, முதல்வரின் அறிவுறுத்தலின்படி அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192-ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றி புதிய பெயர் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x