தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி எடுக்கும்: குளிர்பான ஆலைகளை தடை செய்ய வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி எடுக்கும்: குளிர்பான ஆலைகளை தடை செய்ய வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்
Updated on
1 min read

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக் களிடமே விற்பனை செய்யும் கோக கோலா, பெப்சி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை:

திருநெல்வேலி, கங்கைகொண் டான் தொழிற்பேட்டையில் உள்ள கோக கோலா நிறுவனம் தாமிர பரணி ஆற்று நீரை, ஆயிரம் லிட்ட ருக்கு 47 பைசா வீதம் அரசுக்கு செலுத்தி, நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி வருகிறது. தற்போது கோக கோலா நிறுவ னம் தனது விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் என்ற அளவில் தாமிரபரணி தண்ணீரை உறிஞ்ச திட்டமிட்டுள்ளது.

இதுபோன்ற விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும்போது, முறையாக முன்னறிவிப்பு செய்து, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால், அந்த விதிமுறையை இந்நிறுவனம் பின்பற்ற வில்லை.

கோக கோலா நிறுவனம், உயர்த் தப்பட்ட சீவலப்பேரி தடுப்பணை யின் மூலம் விவசாயிகளுக்கு நீராதாரம் கூடும் என்றும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், உறை கிணறுகளின் நீர்நிலை சீராகும் என்றும் பித்தலாட்டப் பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ளது. விரிவாக்கப் பணிகளுக்குத் தேவைப்படும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதால் பொதுமக்கள், விவ சாயிகள் மத்தியில் கொந்தளிப் பான நிலை ஏற்படும் என்பதை உணர்ந்தே இதுபோன்ற பிரச்சாரங் களை மேற்கொண்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வேளாண்மைக்கு ஆதாரமாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிற தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி, பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோக கோலா, பெப்சி போன்ற நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in