Published : 21 Oct 2021 01:12 PM
Last Updated : 21 Oct 2021 01:12 PM

100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை : புதுவை ஆளுநர் தமிழிசை வாழ்த்து

நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனைப்படுத்தியுள்ளது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “

மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்த முடியுமா? என்று கேட்ட மற்ற நாடுகளுக்கு இன்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி முடியும் என்று நிருபித்து சாதனை படைத்த நாடு நம் இந்தியா

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த பெரும் சாதனையை படைக்க நம் இந்தியாவை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி மற்றும் 100 நாடுகளுக்கும் கொடுத்து உதவி சாதனை படைத்த நாடு இந்தியா.

இந்த மாபெரும் சாதனையை படைக்க கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த மருத்துவ வல்லுநர்கள், செயலாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x