Published : 25 Mar 2016 10:49 AM
Last Updated : 25 Mar 2016 10:49 AM

தொகுதிப் பங்கீடு பேச்சு: குலாம் நபி ஆசாத் சென்னை வருகை

தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுக தலைமையில் காங்கிரஸ் சந்திக்கவுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச குலாம் நபி ஆசாத், முகில் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் குலாம் நபி ஆசாதையும், முகுல்வாஸ்னிக்கையும் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், "தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடுவதை முடிவு செய்வதற்காக கடந்த முறை சென்னை வந்திருந்தேன்.

தற்போது, மீண்டும் தமிழகம் வந்திருக்கிறோம். திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்துகிறோம். இந்த சந்திப்பின்போது நிச்சயமாக தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். ஆனால், இது முதல்கட்ட ஆலோசனையே" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x