Last Updated : 20 Oct, 2021 03:51 PM

 

Published : 20 Oct 2021 03:51 PM
Last Updated : 20 Oct 2021 03:51 PM

புதுச்சேரியில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (அக். 20)வெளியிட்ட தகவலில் கூறியுள்ளதாவது:

''புதுச்சேரி மாநிலத்தில் 4,065 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 34, காரைக்காலில் 3, மாஹேவில் 5 பேர் என மொத்தம் 42 பேருக்கு (1.03 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 94 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 367 பேரும் என 461 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,852 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 71 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 208 (98.19 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 84 ஆயிரத்து 545 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x