Published : 17 Mar 2016 08:05 AM
Last Updated : 17 Mar 2016 08:05 AM
வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை என சமூக வலை தளங்களில் தகவல் பரவி வரும் வேளையில் தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணையதள சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 24-ம் ஹோலி பண்டிகை, 25-ம் தேதி புனித வெள்ளி, 26-ம் தேதி 4-வது சனிக்கிழமை மற்றும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழை என 4 நாட்கள் விடுமுறை தினம் வருவதால் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என சமூகவலைதளங்கள், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வங்கிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, ``ஹோலி பண்டிகை வடஇந்தியாவில் கொண்டாடப் படுவதால் அங்குள்ள வங்கிகளுக்கு மட்டுமே இப்பண்டிக்கைக்கான விடுமுறை பொருந்தும். தமிழகத்தில் 24-ம் தேதி அனைத்து வங்கிகளும் செயல்படும். 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT