Published : 17 Mar 2016 08:05 AM
Last Updated : 17 Mar 2016 08:05 AM

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை என சமூக வலை தளங்களில் தகவல் பரவி வரும் வேளையில் தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணையதள சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 24-ம் ஹோலி பண்டிகை, 25-ம் தேதி புனித வெள்ளி, 26-ம் தேதி 4-வது சனிக்கிழமை மற்றும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழை என 4 நாட்கள் விடுமுறை தினம் வருவதால் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என சமூகவலைதளங்கள், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வங்கிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, ``ஹோலி பண்டிகை வடஇந்தியாவில் கொண்டாடப் படுவதால் அங்குள்ள வங்கிகளுக்கு மட்டுமே இப்பண்டிக்கைக்கான விடுமுறை பொருந்தும். தமிழகத்தில் 24-ம் தேதி அனைத்து வங்கிகளும் செயல்படும். 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x