Published : 17 Oct 2021 12:59 PM
Last Updated : 17 Oct 2021 12:59 PM

தங்கப்பசையை உடலுக்குள் மறைத்து கடத்தல்: 3 பேர் கைது

சென்னை

2.55 கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உளவுத்தகவல் அடிப்படையில் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு விமானங்களில் வந்த 5 பயணிகளிடம் சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் 10 பொட்டலங்களில் தங்கப்பசையை உடலுக்குள் மறைத்துவைத்து கடத்தி வந்தனர். அவற்றிலிருந்து 2.55 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 4.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களும் சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் தொடர்பாக 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெறுவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x