

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப் படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பாம்பன் மற்றும் ராமேசுவரம் நாட்டுப் படகு மீனவர்கள் 15-வது நாளாக நேற்றும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
கடந்த மார்ச் 13-ம் தேதி தலைமன்னார் அருகே மீன் பிடித்த பாம்பனைச் சேர்ந்த 23 நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து, அவர்கள் வவுனியா சிறையில் அடைத்தது. கைதானவர்களையும், பறி முதல் செய்யப்பட்ட படகு களையும் விடுவிக்க வலியு றுத்தி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தை 15-வது நாளாக நேற் றும் தொடர்ந்தனர். படகுகளில் கருப்புக் கொடிகளை கட்டி தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதே கோரிக் கையை வலியுறுத்தி பாம்பனில் கடலில் இறங்கிப் போராட்டம், மீன்துறை அலுவ லக முற்றுகை என தொடர் போராட்டங்களை நடத்தினர்.