இலங்கைக் கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: நடவடிக்கை கோரி பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்

ஓபிஎஸ் - பிரதமர் மோடி: கோப்புப்படம்
ஓபிஎஸ் - பிரதமர் மோடி: கோப்புப்படம்
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக். 16) பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்:

"கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நீங்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in