Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM

100 கோடி கரோனா தடுப்பூசி கொண்டாட்டம்: மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளிர்ந்த கலைச்சின்னம்

கரோனா தடுப்பூசியை 100 கோடிபேர் செலுத்திக் கொண்டதை கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள கலைச்சின்னங்கள் மின்விளக்குகள் மூலம் மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளிர்ந்ததை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

கரோனா தொற்றை தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நம் நாட்டில் 100 கோடி பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கொண்டாடும் வகையிலும் பொதுமக்கள் மத்தியில்விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், நாடு முழுவதும் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள கலைச்சின்னங்களை 14 முதல் 16-ம் தேதி வரையில் 3 நாட்கள் மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளிரச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஐந்துரதம் மற்றும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கயிலாச நாதர் கோயில் ஆகியவை தொல்லியல் துறை சார்பில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நமது தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்தன.

தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளியப்பன் மற்றும் மாமல்லபுரம் அலுவலர் சரவணன் ஆகியோர் மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளிர்ந்த கலைச்சின்னங்களை நேரில் பார்வையிட்டனர். இதேபோல், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலைச் சின்னங்களை கண்டு ரசித்தனர்.

நாடு முழுவதும் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள கலைச்சின்னங்களை 14 முதல் 16-ம் தேதி வரையில் 3 நாட்கள் மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளிரச் செய்ய வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x