Published : 14 Oct 2021 04:51 PM
Last Updated : 14 Oct 2021 04:51 PM

தமிழகத்தில் இரு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை

தமிழகத்தில் இரு ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று (அக். 14) வெளியிட்ட அறிவிப்பு:

"வணிகவரித்துறையின் இணை ஆணையராகப் பதவி வகித்து வரும் ஷங்கர் லால் குமாவத் ஐஏஎஸ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பதவி வகித்து வரும் அலர்மேல்மங்கை ஐஏஎஸ், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x