

உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணா அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு தேவையான சிகிச்சைகள் முறையாக அளிக்கப்பட்டு வருகின்றன என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் விரைவில் நலம்பெறவேடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.