Published : 26 Mar 2016 11:11 AM
Last Updated : 26 Mar 2016 11:11 AM
சென்னை எழும்பூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வைகோ, திருமாவளவனை சந்தித்து ஜி.கே.வாசன் பேசினார்.
மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோவின் நண்பர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது வைகோவும், திருமாவளவனும் சுமார் 15 நிமிடம் ஜி.கே.வாசனிடம் பேசினர். அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் சேர உள்ளதாக தகவல்கள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், வைகோ மற்றும் திருமாவளவனிடம் ஜி.கே.வாசன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT