Published : 28 Mar 2016 09:50 AM
Last Updated : 28 Mar 2016 09:50 AM

தபால்களில் வாக்காளர் விழிப்புணர்வு முத்திரை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் அனைத்து தபால்களிலும் இன்று முதல் வாக்காளர் விழிப்புணர்வு முத்திரை பதிக்கப் படுகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் அனைத்து தபால்களிலும் இன்று (மார்ச் 28) முதல் தேர்தல் விழிப்புணர்வு ‘சிறப்பு முத்திரை’ அச்சு பதிக்கப்படுகிறது. தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் தபால்களிலும் சிறப்பு முத்திரை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘இந்த நடவடிக்கை 100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிப்பதாக அமையும்’ என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x