

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், நிலைக்குழுத் தலைவர்கள் ஆகியோரின் அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டது.
தமிழகத்தில் மே 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகங்களை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்வரை பயன்படுத்த முடியாது.
எனவே மாநகராட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் மேயர், துணை மேயர் அலுவலகங்கள், நிலைக்குழுத் தலைவர்களின் அலு வலகங்கள் ஆகியவை மாவட்ட தேர்தல் நிர்வாகத்தால் நேற்று பூட்டப்பட்டன. அனைத்து அலுவலக அறைகளிலும் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டன.
நேற்று முன்தினம் முதல் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன், விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டு வருகின்றன.