Published : 12 Oct 2021 03:12 AM
Last Updated : 12 Oct 2021 03:12 AM

திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

திருநங்கைகள் நல வாரியத்தின் புதியஅலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் 12 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 13 நபர்கள்தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், கருவேலம்பட்டி - ஏ.ரியா, தூத்துக்குடி மாவட்டம் கீழ அலங்காரத்திட்டு - டி.பியூட்டி, சென்னை திருவல்லிக்கேணி -ஆர்.அனுஸ்ரீ, செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துரை - சத்யஸ்ரீ சர்மிளா, பெரும்பாக்கம் -எம்.நிலா, மயிலாப்பூர் -எம்.ராதா, மதுரை மாவட்டம், விஸ்வநாதபுரம் - பிரியா பாபு, சூளைமேடு - கே.அருணா, திருவொறும்பூர் - பி.மோகனாம்பாள் நாயக், சென்னை அமைந்தகரை - டாக்டர் ஆர்.சுதா, ஆதம்பாக்கம் - கே.அருண்கார்த்திக், தேனி மாவட்டம் பொன்னாம்பாள்பட்டி - செல்வம் முனியாண்டி, சென்னை மாவட்டம் பல்லவா கார்டன் 8-வது அவென்யூ - வித்யா தினகரன் (பெண்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x