Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

சொத்தை பறித்துக் கொண்டு பெற்றோரை கைவிட்ட மகன்: ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார்

ஆம்புலன்ஸில் வந்த சண்முகம், அவரது மனைவி முத்துலெட்சுமி.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், பொட்டகவயலைச் சேர்ந்தவர் சண்முகம்(75). இவர், தனது மனைவி முத்துலெட்சுமியுடன் ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலு வலகத்துக்கு வந்து மனு அளித்தார். அதில், தங்களின் மகன் சொத்தை பறித்துக் கொண்டு தங்களை பராமரிக்காமல் கைவிட்டுவிட்டதாக புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து சண்முகத்தின் மனைவி முத்துலெட்சுமி கூறியதாவது: எனது கணவர் ராமநாதபுரம் நகர் நீலகண்டி ஊருணி கே.கே.நகரில் 5 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். வயது முதிர்ந்த காரணத்தால் எனது கணவரும், நானும் சொந்த ஊரில் உள்ள வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது மகன் முனியசாமியும், மருமகளும் 2016-ம் ஆண்டு என்னையும், எனது கணவரையும் பராமரித்துக் கொள்வதாகக் கூறி, வீடுகளை தானமாக எழுதி வாங்கிக் கொண்டனர். அதன்பின் எங்களை பராமரிக்காமல் விட்டு விட்டனர். எனது கணவர் உடல்நிலை சரியில்லாததால் படுத்த படுக்கையாக உள்ளார். மகனிடமிருந்து சொத்தை மீட்டுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x