Published : 25 Mar 2016 08:56 AM
Last Updated : 25 Mar 2016 08:56 AM
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மஜக அரசியல் மறுமலர்ச்சி மாநாடு, சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் 26-ம் தேதி (நாளை) நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்புவிடுத்திருந்தோம். முதல்வர் சார்பில் எம்ஜிஆர் நற்பணி மன்ற செயலாளரும், வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் பங்கேற்க உள்ளார். அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களான செ.கு. தமிழரசன், சரத்குமார், கதிரவன், தி.வேல்முருகன், உ. தனியரசு, தாவூத் மியாகான் ஆகியோர் பங்கேற்கின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் மஜக இணையுமா என்று தமிமுன் அன்சாரியிடம் கேட்டபோது, ‘முதல்வரின் அழைப்புக்காக காத்திருக்கிறோம்’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT