Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM

2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 73.27 சதவீத வாக்கு பதிவு: 74 மையங்களில் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் மற்றும் 28 மாவட் டங்களில் காலியாக உள்ள 130 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந் தது. மொத்தம் 73.27 சதவீத வாக்கு கள் பதிவாயின. 12-ம் தேதி 74 மையங்களில் வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது. மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு களுடன் கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவி களுக்கான இடைத்தேர்தல் ஆகிய வற்றை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. மொத்தம் 27 ஆயிரத்து 791 பதவிகளை நிரப்ப இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்தலில் 3,346 பதவி களுக்கான வேட்பாளர்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, 24,416 பதவிகளுக்கு மொத்தம் 80,819 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 76 லட்சத்து 60 ஆயிரம் வாக் காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர்.

கடந்த 6-ம் தேதி 9 மாவட்டங் களில் உள்ள 39 ஒன்றியங்களில், 7,921 வாக்குச்சாவடிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தம் 77.43 சதவீதம் பேர் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து 9 மாவட்டங்களில் மீதம் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகளில் வாக் குப்பதிவு நடைபெற்றது.

பாதுகாப்பு பணிகளில் போலீஸார், ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 39 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குச்சாவடி பணிகளில் 1 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணி நிலவரப்படி 9 மாவட்டங்களில் 9.72 சதவீதம், இதர 28 மாவட்டங்களில் 13.35 சதவீதம் வாக்குகளும், மாலை 3 மணிக்கு 9 மாவட்டங்களில் 60.34 சதவீதம், இதர மாவட்டங்களில் 59.41 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்ட நிலை யில், அவற்றில் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணைய தலைமையகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகிய வற்றில் இருந்து கண்காணிக்கப் பட்டது. மாநில தலைமையகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார், செயலர் எ.சுந்தர வல்லி ஆகியோர் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணிக்கப்படு வதை நேற்று ஆய்வு செய்தனர். மேலும் பல வாக்குச் சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கேமரா மூலமும், சிசிடிவி கேமராக்கள் மூலமும் பதிவு செய்யப்பட்டன.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள், தொற்று அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க அனு மதிக்கப்பட்டனர். 6 மணிக்குள் சில வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க வந்த நிலையில், அவர்களுக்கு டோக் கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் வாக்குப்பெட்டிகள் ஏற் கெனவே 35 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங் களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடை பெற்ற 2-ம் கட்ட வாக்குப்பதிவு மட்டு மல்லாது, இரு கட்ட வாக்குப்பதிவு களும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்தன.

அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், 9 மாவட்டங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மொத்தம் 74 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன், வேட் பாளர்களின் முகவர்கள் முன்னிலை யில், வாக்குப் பெட்டிகள் கண் காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிசிடிவி கேரமாக்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதிவான வாக்குகள் 12-ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x