Published : 27 Mar 2016 09:29 AM
Last Updated : 27 Mar 2016 09:29 AM

தேர்தல் பணிகளில் பெண்களுக்கு விதிவிலக்கு: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

தேர்தல் பணிகளில், ஒரு வயது கைக் குழழந்தை வைத்துள்ள தாய்மார்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக தேர்தல் ஆணையகத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவுக்கு வந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன், பத்திரிகையாளர் களிடம் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 லட்சம் ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்றுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி நாளான்றே, தபால் ஒட்டுகளை செலுத்தும் வகையிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே 100 சதவித வாக்கு பதிவை செயல்படுத்த முடியும். மேலும், தேர்தல் பணிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் மற்றும் ஒரு வயது கைக் குழந்தை வைத்துள்ள தாய்மார்களுக்கு, சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை விடுத்தோம். இதில், கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கைக் குழந்தை வைத்துள்ள தாய்மார்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. அதனால், எங்களின் கோரிக்கை பரிசிலிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளோம். மேலும், பெண் தேர்தல் பணியாளர்களுக்கு இருப்பிடத்தில் இருந்து, 15 கி.மீ தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளில் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x