Published : 15 Mar 2016 09:08 AM
Last Updated : 15 Mar 2016 09:08 AM

‘எங்கிருந்தாலும் வாழ்க’: ஹெச்.ராஜா வாழ்த்து

ஈரோட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட கட்சிகளின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துகிறேன். தமிழகத்தில் தற்போது எல்லோருக்கும் முதல்வர் பதவி மீது ஆசை வந்துவிட்டது. மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் தொகுதிவாரியாக மாநாடுகள் நடத்தப்படும். அதன் பின்னர் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோர் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x