Published : 29 Mar 2016 08:57 AM
Last Updated : 29 Mar 2016 08:57 AM
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:
தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக, திமுக கட்சிகள் ஊழல் கட்சிகளாகிவிட்டன. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று கட்சி இல்லாமல் இருந்தது. இந்த தேர்தலில் மாற்று கட்சிகள் அடங்கிய மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக இணைந்த அணி உருவெடுத்துள்ளது. மக்கள் நல கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் வெளியிடப்படும். எங்களது ஒரே லட்சியம் அதிமுகவை வீழ்த்துவதுதான். தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களோ, பொதுமக்களோ, அமைச்சர்களோ தமிழக முதல்வரை சந்திப்பது என்பது சாத்தியமில்லாத நிலை இருக்கிறது. மின்சாரம் தொடர்பாக தமிழக முதல்வருடன் பேசுவதற்கு முயன்றும் முடியவில்லை என மத்திய அமைச்சரே தற்போது கூறியிருக்கிறார் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT