Published : 06 Oct 2021 03:11 AM
Last Updated : 06 Oct 2021 03:11 AM

உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு வாக்களியுங்கள்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமகவினருக்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வாக்காளர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

9 மாவட்டங்களில் முதல்கட்டமாக 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 1,577 ஊராட்சித் தலைவர்கள், 12,252 ஊராட்சி உறுப்பினர்கள் பணியிடங்களுக்கு 6-ம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடக்கிறது. இவற்றில் சில இடங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களுக்கு மட்டும் மக்கள் வாக்களிப்பார்கள்.

உள்ளாட்சித் தேர்தல்களை உங்களின் குறைகள் களையப்படுவதற்கான வாய்ப்பாகவும், வாக்குரிமையை உங்களுக்கு கிடைத்த வரமாகவும் கருதிக்கொள்ளுங்கள். அந்த வரத்தைபயன்படுத்தி பாமகவினருக்கு மாம்பழம் சின்னத்திலும், ஊராட்சித் தலைவர் மற்றும்உறுப்பினர் பதவிகளுக்கு ஆங்காங்கே ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களிலும் வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x