Published : 05 Oct 2021 12:56 PM
Last Updated : 05 Oct 2021 12:56 PM

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‌முனைவர்‌ நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:‌

''தென்‌மேற்கு வங்கக் கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில்‌ (5.8 கிலோ மீட்டர்‌ உயரம் வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக,

05.10.2021: அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, திருவண்ணாமலை, கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்‌. தென்‌ மாவட்டங்கள்‌, டெல்டா (தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை) மாவட்டங்கள்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, நாமக்கல்‌ மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன் கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

06.10.2021: நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தருமபுரி, சேலம்‌, தேனி, திண்டுக்கல்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

07.10.2021: வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

08.10.2021: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

09.10.2021: வேலூர்‌, ராணிப்பேட்டை திருவள்ளூர்‌ மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, வட மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ பெரும்பாலான பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ அவ்வப்போது கனமழையும்‌ பெய்யக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்‌
05.10.2021:
தமிழகக் கடற்கரையை ஒட்டிய தென்‌மேற்கு வங்கக் கடல்‌ பகுதிகளில்‌, சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

08.10.2021:
மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x