Published : 03 Oct 2021 01:41 PM
Last Updated : 03 Oct 2021 01:41 PM

11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‌முனைவர்‌ நா.புவியரசன் ‌இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’தென்‌மேற்கு வங்கக் கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தமிழகக் கடற்பகுதிகளில்‌ (3.1 கிலோ மீட்டர்‌ உயரம் வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக,

03.10.2021:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெருமபாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை‌ பெய்யக்கூடும்‌.

04.10.2021:

புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, சிவகங்கை மற்றும்‌ டெல்டா (தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர்‌, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

05.10.2021 :

தென்‌ மாவட்டங்கள்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌ மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கரூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, நாமக்கல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

06.10.2021 :

கிருஷ்ணகுரி, திருப்பத்தூர்‌, தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திண்டுக்கல்‌, தேனி அரியலூர்‌, மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.’’

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x