Published : 28 Mar 2016 08:54 AM
Last Updated : 28 Mar 2016 08:54 AM

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு 2 நாளில் முடிவாகும்

திமுகவுடன் இன்னும் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு முடிவாகிவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறிய தாவது:

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளை பெறும் என்பது இன்னும் 2 நாட்களில் முடிவாகும். இந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.

கூட்டணி அமைப்பதற்காக தேமுதிகவுக்கு திமுக ரூ.500 கோடி கொடுக்க முன்வந்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய கருத்து ஆதாரமற்றது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x