Published : 31 Mar 2016 08:20 PM
Last Updated : 31 Mar 2016 08:20 PM

234 தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார்: பிரேமலதா

வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் 234 தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கோவையில் தேமுதிக தேர்தல் பிரச்சார விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பிரேமலதா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்கக்கூட்டம் அனைத்து மாநகராட்சிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட பிரச்சாரம் இன்னும் 5 நாட்களில் முடிவடையும்.

தலைமைக் கழகம் வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர், விஜயகாந்தும், நானும் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.

தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத லஞ்சம், ஊழலற்ற மாற்று அணியை மக்கள் எதிர்பார்ப்பதால் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு பெருகி இருப்பதை கண்கூட பார்க்கமுடிகிறது.

இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x