Published : 10 Mar 2016 08:57 AM
Last Updated : 10 Mar 2016 08:57 AM

இந்திய கம்யூனிஸ்ட் இன்று ஆலோசனை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவல கத்தில் இன்று நடைபெறவுள்ளது.

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

மக்கள் நலக் கூட்டணியில் விரை வில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கும் எனக் கூறப் படுகிறது. எனவே, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்கு சாதகமான தொகுதி கள் குறித்தும், மக்கள் நலக் கூட் டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக் கான பணிகளை தமிழகம் முழு வதும் தொடங்கியுள்ளோம். அது குறித்து கூட்டத்தில் விவாதிப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x