Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு: துரிதப்படுத்த தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள் ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத் தில் கூறியிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எனது பாராட்டுகள். அதேநேரம் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது தொடர்பாக இன்னும் நீங்கள் முழு திறனையும் பயன்படுத்தி முயற்சி எடுக்கவேண்டும்.

நாட்டின் முக்கியமான மாநிலங்களில் நம் மாநிலம் இப்போதும் 13-வது இடத்திலேயே உள்ளது. எனவே, தடுப்பூசி போடும் அளவு குறைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 13 சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும்.

சுகாதாரத் துறை செயலர், பொது சுகாதார இயக்குநருடன் பேசி, தேவையான தடுப்பூசிகளை பெற வேண்டும். நீங்கள் இந்தவிஷயத்தில் ஏதேனும் சிக்கலை சந்தித்தால் அதுபற்றி எனக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x