மேட்டூர் அணை நீர் திறப்பு: விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று (செப். 27) விநாடிக்கு 7 ஆயிரத்து 50 கன அடியாக இருந்தது. இன்று (செப். 28) நீர்வரத்து விநாடிக்கு 9,875 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி வரை டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமும், மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால், அங்கு பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 73.49 அடியாக இருந்த நிலையில், இன்று அணையின் நீர் மட்டம். 73.67 அடியாக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in