Published : 29 Mar 2016 08:56 AM
Last Updated : 29 Mar 2016 08:56 AM
உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்குப் பின் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளராக எம்.வெங்கடேசனை அறிமுகம் செய்து வைத்த கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உளுந்தூர்பேட்டை, குமாரபாளையம், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புத்தூர், மாதவரம் உட்பட 12 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும், திமுக, பாமக போன்ற கட்சிகள் அணிகள் புறக்கணிக்கப்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தடுமாற்றம் உள்ளது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது . இதை வாக்காளர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT