Last Updated : 27 Sep, 2021 11:01 AM

 

Published : 27 Sep 2021 11:01 AM
Last Updated : 27 Sep 2021 11:01 AM

மேட்டூர் அணை நீர்வரத்து 7,051 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,051 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த சில நாட்களாக, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் குறைவாகவே இருந்தது. எனினும், நேற்று (செப். 26) விநாடிக்கு 6,831 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இன்று (செப். 27) காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 7,051 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,000 கன அடி வீதமும், மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து பாசனத்துக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 73.58 அடியாக இருந்தது. இன்று அணையின் நீர்மட்டம் 73.49 அடியாகக் குறைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x