Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து ஈரோடு நோக்கி நேற்றுஅரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் சாலை யில், தட்டப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தை ஒற்றை யானை வழிமறித்தது. இதனால், சிறிது தூரம் ஓட்டுநர், பேருந்தை பின்னால் இயக்கினார்.
இருப்பினும் விரட்டி வந்த யானை, திடீரென தும்பிக்கையால் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. இதனால், ஓட்டுநர் தனது இருக்கையில் இருந்து எழுந்து பேருந்தினுள் ஓடினார். யானையைக் கண்டு பயணிகள் அலறினர். பயணிகளை ஆசுவாசப்படுத்தி, அமைதியாக இருக்குமாறு நடத்துநர் கூறினார். சில நிமிடங்கள் அமைதியாக நின்ற யானை பின்னர் அங்கிருந்து நகர்ந்து சாலையோரம் சென்றது.
பின்னர் ஓட்டுநர் பேருந்தை இயக்கி, யானையைக் கடந்து ஓட்டிச்சென்றார். இதனால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சம்பவத்தை பேருந்தில் இருந்தபயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்துபோக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT