Published : 05 Mar 2016 10:26 AM
Last Updated : 05 Mar 2016 10:26 AM
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், அப்துல்கலாம் லட்சிய இந்தியக் கட்சித் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழருவி மணியன் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் விரும்புகிறது. இந்த நோக்கிலேயே கடந்த ஆண்டில் 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தோம். இந்த சூழலில், எங்களுடன் ஒத்த கருத்து உடைய அப்துல் கலாம் இந்திய லட்சியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் இயக்கம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது, யார் யார் வேட்பாளர் என்பதை விரைவில் அறிவிப்போம். எங்கள் அணிக்கு ‘மாற்று அரசியல் கூட்டணி’ என்று பெயரிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
‘காந்திய மக்கள் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் மக்கள்நலக் கூட்டணியை ஆதரிப்பதாக கூறியிருந்தீர்களே’ என்று செய்தியாளர்கள் கேட்டனர், அதற்கு அவர், ‘‘அப்போது அப்படி கூறினேன். இப்போது மக்கள்நலக் கூட்டணியை ஆதரிக்கவில்லை. நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT