Published : 23 Mar 2016 08:36 AM
Last Updated : 23 Mar 2016 08:36 AM

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

நாளை மறுநாள் 25-ம் தேதி புனித வெள்ளி, 26-ம் தேதி 4-வது சனிக்கிழமை மற்றும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம் களிலும் போதிய அளவு பணத்தை இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

24-ம் தேதி ஹோலி பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x