Published : 01 Mar 2016 10:23 AM
Last Updated : 01 Mar 2016 10:23 AM
தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, மாவட்ட வாரியாக நேர்காணலும் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலை ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். விருப்ப மனு அளிக்காதவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த ப.சிதம்பரம், தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ‘சட்டப்பேரவை தேர்தலுக்காக எனது தலைமையில் 14 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவை அமையுங்கள். அந்தக் குழுவில் வேண்டுமானால் இளங்கோவன் ஒரு உறுப்பினராக இருக்கட்டும்’ என்று கட்சி மேலிடத்திடம் சிதம்பரம் தெளிவாக சொல்லிவிட்டாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT