Published : 20 Feb 2016 08:51 AM
Last Updated : 20 Feb 2016 08:51 AM
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளோர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி முதல் வரும் 29-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இப்பணியின்போது இறந்த வாக் காளர்கள், பலமுறைப் பதிவு வாக் காளர்கள் மற்றும் ஒரே அடையாள அட்டை எண் கொண்ட வாக்காளர் களி்ன பட்டியல் தயாரிக்கப்பட்டு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் சரிபார்த்தல் பணி நடக்கிறது.
24-ம் தேதி முகவர் சந்திப்பு
இப்பணிக்கான அட்டவணைப் படி 19-ம் தேதி (நேற்று) வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியின ரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி முகவர்களின் சந்திப்பு கூட்டம் நடப்பதாக இருந்தது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டி யலில் இருந்து நீக்கப்பட உள் ளோர் பட்டியலை அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் சரிபார்க்கும் பணி இன்னும் சில மாவட்டங்களில் முடியவில்லை. எனவே, வாக்குச்சாவடி அலுவலர் கள், அரசியல் கட்சிகளின் முகவர் களின் சந்திப்பு கூட்டம் 24-ம் தேதி நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பெயர் களை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கும் முகாம் மாற்றுத் திறனாளிகளுக்கான வித்யாசாகர் மையத்தில் நடந்தது. இதில், 50-க் கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி களின் பெயர்கள், ஆன்லைன் மூலம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT