Published : 20 Feb 2016 08:32 AM
Last Updated : 20 Feb 2016 08:32 AM

‘நமக்கு நாமே பயணத்தால் ஆணவம் இல்லை’

ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் நேற்று நடந்த ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயண நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ‘நமக்கு நாமே’ பயணத்தை வெற்றிகரமாக நடத்தியதால் எனக்கு ஆணவம் வரவில்லை; பெருமை ஏற்பட்டு இருக்கிறது. அடுத்தகட்டமாக மக்கள் நலப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களை சந்தித்து பேசவுள்ளோம்.

இந்த ஆட்சியின் முடிவுக்காக நாட்களை எண்ணிக்கொண்டு வருகிறோம். மே மூன்றாவது வாரத்தில் தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி ஏற்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அவிநாசி-அத்திக்கடவு திட்டம்

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “2011 சட்டப்பேரவை தேர்தலுக்காக வெளியிட்ட திமுக தேர்தல் அறிக் கையின் 19-ம் பக்கத்தில், பவானி ஆற்றில் உள்ள உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயப் பணிகளுக்குப் பயனுறும் வகையிலும் அத்திக்கடவு- அவிநாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த வாக்குறுதிப்படி, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x