Published : 06 Feb 2016 08:26 AM
Last Updated : 06 Feb 2016 08:26 AM

அம்மா சிறு வணிகர் கடன் திட்டம்: 76 ஆயிரம் சிறு வணிகர்களுக்கு ரூ.38 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

அம்மா சிறு வணிகர் கடன் திட்டத்தின் கீழ் 76 ஆயிரத்து 383 சிறு வணிகர்களுக்கு ரூ.38 கோடியே 19 லட்சம் கடன் வழங்கப்பட் டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங் களிலும் சிறு வணிகர்கள், பெட்டிக்கடைக்காரர் கள் பயன்பெறும் வகையில் ‘அம்மா சிறு வணிக கடன் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடந்த முகாமை நேற்று ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியபோது, ‘‘முதல்வர் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி (நேற்று) வரை மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. ஜனவரி 22 முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை 12 நாட்களில் 6 ஆயிரத்து 453 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 3 லட்சத்து 89 ஆயிரத்து 78 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் அளித்துள்ளனர். இதுவரை 76 ஆயிரத்து 383 சிறுவணிகர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம், ரூ.38 கோடியே 19 லட்சம் சிறுவணிகக் கடன் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

இதில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெய முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x