Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM

சாதாரண கட்டண பேருந்துகளை அதிகரித்து இயக்க வேண்டும்: பெண் பயணிகள் வலியுறுத்தல்

சென்னை

அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள், திருநங்கைள், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால், அலுவலகநேரம் அல்லாத மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சாதாரண கட்டண பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பெண் பயணிகள் சிலர் கூறும்போது, “சாதாரணகட்டண பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணிக்கும் திட்டத்தால் எங்களுக்கான போக்குவரத்து செலவு குறைந்து விட்டது.ஆனால், பல்வேறு வழித்தடங்களில் சாதாரண கட்டண பேருந்துசேவை சீராக இல்லை.

எனவே, பெண் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சாதாரண கட்டண பேருந்துகளை அதிகரித்து இயக்க மாநகர போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x