Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM
தேவகோட்டை அருகே அங்கன்வாடி மையம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்து வருகின்றனர்.
தேவகோட்டை அருகே சடையன்காடு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் விவசாயிகளாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். அவர்களுடைய 5 வயதுக்குட்பட்ட 25 குழந்தைகள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்கின்றனர்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மையம், தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த கட்டிடத்திலேயே ரேஷன் கடையும் செயல்படுகிறது. இதனால் குழந்தைகள் படிக்கும்போதே அரிசியை சாப்பிட அதிக அளவில் குரங்குகளும் வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, ஒரு குழந்தையை குரங்கு கடித்தது.
இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சித் தலைவர் ராமலட்சுமி ரங்கையா கூறும்போது, ‘‘சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம் குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT