Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

சென்னை மாநகராட்சி சார்பில் நாளை 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சி சார்பில் நாளை (செப்.19) 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று உயரத் தொடங்கியுள்ளது.

இரு தவணை தடுப்பூசி போட்டால் மட்டுமே கரோனா தொற்றை முழுமையாக தடுக்க முடியும் என்ற நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 1,600 இடங்களில் தீவிர கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 98,227 பேர் முதல் தவணை தடுப்பூசிகள், 93 ஆயிரத்து 123 பேர் 2-ம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இம்முகாம்களை நடத்துவதால், தடுப்பூசி போட வருவோர் அதிகரித்துள்ள நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் 1,600 இடங்களில் முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இம்முகாம்களில் 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி 1,600 தடுப்பூசி முகாம்கள் அமைந்துள்ள இடங்களின் விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள மாநகராட்சி சார்பில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சி இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 - 2538 4520, 044 - 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x